19/05/2025
#சுவாசம் அறக்கட்டளை மற்றும்
ஏற்காடு ஃபில்டர் காபி.
முதல் முதலாக பிளாஸ்டிக் இல்லாத காஃபி ஷாப்
இணைந்து நடத்திய மாபெரும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் நிகழ்வு
சேலம் மாவட்டம் ஏற்காடு ரவுண்டானா அருகில் சிறப்பாக நடைபெற்றது
இதில் ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளர் அம்மா அவர்கள் ஏற்காடு ஃபில்டர் காபி உரிமையாளர். சமூக சேவகர்
திரு. பிரேம் அவர்கள்
சுவாசம் அறக்கட்டளை செயற்குழு தலைவர் சமூக சேவகர். திரு. ஜெய பாஸ்கர் அவர்கள்
சுவாசம் அறக்கட்டளை துணை செயலாளர் முனைவர் சமுக சேவகர் திரு. செந்தில்குமார் அவர்கள் சுவாசம் அறக்கட்டளை பொருளாளர் சமூக சேவகர் திரு. அருண்குமார் அவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..
இதில்
#பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது..
#பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றுவது .
#மண் வளம் பாதுகாப்பது .
#இந்த வளமான பூமியை வருங்கால சந்ததிக்கு காத்து தருவோம்.
#பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றிய தகவல்கள் தருவது.
போன்ற விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து
துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தோம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் என்ற கொடிய அரக்கனை ஒழிப்போம்.
வாருங்கள் ஒன்றிணைந்து வென்றெடுப்போம்
#இந்த வளமான பூமியை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றுவோம்
இது போன்ற பிரச்சாரம் செய்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்